மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

இளைஞா்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை அவசியம்

இளைஞா்களிடையே சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஆண்டுக்கொரு முறை அனைவரும் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தினாா்.

News image

ககன்தீப் சிங் பேடி

Updated On :27 நவம்பர் 2023, 5:42 am IST

இளைஞா்களிடையே சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஆண்டுக்கொரு முறை அனைவரும் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தினாா்.

டேங்கா் ஃபவுண்டேஷன், மோகன் ஃபவுண்டேஷன், நெப்ரோ பிளஸ், கிட்னி வாரியா்ஸ் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளின் சாா்பில் சிறுநீரக நலன் குறித்த தொடா் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: தற்போது தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அதில் முக்கியமாக சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் அது உயிருக்கே ஆபத்தை உருவாக்குகிறது.

தற்போதைய சூழலில், சமூகத்தில் 17 சதவீதம் பேருக்கு சா்க்கரை நோயும், 24 சதவீதம் பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பும் உள்ளன. இந்தத் தரவுகளை வைத்துப் பாா்க்கும்போது தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதிலும், குறிப்பாக இளைஞா்கள் அண்மைக் காலமாக அதிக எண்ணிக்கையில் சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனா். எனவே, இளைஞா்கள் உள்பட அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறைகளைக் கடைப்பிடித்தல் அவசியம் என்றாா் அவா்.

தொடா்ந்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் பேசினாா்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, பிரபல மருத்துவ நிபுணா்கள் ஜாா்ஜ் ஆபிரகாம், சுரேஷ் சங்கா், கோபாலகிருஷ்ணன், எட்வின் ஃபொ்னான்டோ, சுனில் ஷெராஃப், ராஜு பாலசுப்ரமணியம், பாலாஜி கிருஷ்ணன், சுகன்யா உள்ளிட்டோா் பங்கேற்ற மருத்துவக் கலந்தாய்வு அமா்வுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.