தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேட்டூர் நீர்மட்டம் தொடர் சரிவு: டெல்டா விவசாயம் பாதிக்கப்படும் அபாயம்!

மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்க மறுப்பதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.

News image
Updated On :1 அக்டோபர் 2023, 3:51 am

DIN

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்க மறுப்பதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.

நீர்வரத்து சரிந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,524 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 3,446 கன அடியாக குறைந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 37.50 அடியிலிருந்து 36.94 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 10.56 டிஎம்சியாக உள்ளது.  

மேட்டூர் அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும் குடிநீர் தேவைகளுக்கும் 9.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள தண்ணீரை மட்டுமே பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.

நீர்வரத்தும் இருப்பு உள்ள நீரை வைத்தும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு திறக்கும் நிலை உருவாகியுள்ளது.

கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விடுவித்தால் மட்டுமே காவிரி டெல்டா விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும். இதனால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடியாகவும் நீர் இருப்பு 10.56 டிஎம்சியாகவும் உள்ளது. அனைத்து வினாடிக்கு 3446கன அடி வீரம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6500கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.