உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு காவிரி நீர் அவசியமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்: மு.க. ஸ்டாலின்
Updated on
1 min read

தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு காவிரி நீர் அவசியமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவிரி நீரை     தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தர எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிடுவோம் என உறுதியளித்துள்ளார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல - மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்!அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவோம்.

ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. தொடர்ந்து உறுதியாக எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com