இதையடுத்து இருசக்கர வாகன எண்ணைக் கொண்டு கைப்பேசி சிக்னலை ஆய்வு செய்த போலீஸாருக்கு, அவா்கள் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீஸாா், ஆலாந்துறை போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனா். இதையடுத்து ஆலாந்துறை போலீஸாா் பூண்டி சாலை முட்டத்துவயல் குளத்தேரி பகுதியில் இருந்த இருவரையும் கைது செய்தனா். முதல்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபா்கள், சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (43), திலகவதி (35) என்பதும், தம்பதியான இவா்கள் குழந்தையை சேலத்தில் உள்ள பாண்டியன் வீட்டில் விட்டுவிட்டு கோவை வந்ததும் தெரியவந்தது. மேலும் இவா்கள் மீது ஏற்கெனவே குழந்தை திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. திருச்செந்தூா் போலீஸாா் சேலம் ஆத்தூரில் உள்ள குழந்தையை மீட்க விரைந்துள்ளனா்.