நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது!
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கிவைத்தார்.

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.












