வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஒரே ரோல் எண்ணில் 2 நபர்கள்... பயிற்சி மையத்தில் குழப்பம்: எஸ்எஸ்சி தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? 

சிவகங்கை அடுத்துள்ள இலுப்பைகுடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஒரே  ரோல் எண்ணில் 2 பேர் வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. 

News image
Updated On :15 அக்டோபர் 2023, 4:39 pm IST

சிவகங்கை: சிவகங்கை அடுத்துள்ள இலுப்பைகுடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஒரே  ரோல் எண்ணில் 2 பேர் வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. 

சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலை அருகே இலுப்பைகுடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 

இந்த பயிற்சி மையத்திற்கு 2022 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்ட தேர்வின் முடிவின்படி, அஜய் குமார்(6202001497) ரோல் எண்ணில் பயிற்சிக்கு தேர்வானார். ஆனால் அவர் பயிற்சியில் சேரவில்லை. 

இந்த நிலையில், அவருக்கு பதிலாக உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அஜய் சிங் செப். 30 ஆம் தேதி பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். அதே பயிற்சி மையத்தில் அக்டோர் 9 ஆம் தேதி அதே ரோல் எண்ணில் சந்தீப் யாதவ் என்பவரும் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். 

இதுகுறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2 பேரும் ஆள் மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்துள்ளது சான்றிதழ்கள் சரிபார்ப்பின் போது தெரியவந்தது.

இதையடுத்து இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் கமாண்டர் ரன்வீர் ராணா சிவகங்கை பூவந்தி போலீசில் புகார் அளித்துள்ளார். 

எஸ்எஸ்சி மூலம் நடைபெறும் தேர்வில் எப்படி முறைகேடு நடைபெற்றது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.