தமிழகத்தில் இயல்பைவிட 39% மழைக் குறைவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 39% மழைக் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இயல்பைவிட 39% மழைக் குறைவு
Updated on
1 min read

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 39% மழைக் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

புயல்கள்(தேஜ் மற்றும் ஹமூன்) கரையை கடந்த நிலையில்,  தமிழத்தில் வடகிழக்குப் பருவமழை வலுவடைய தொடங்கி இருக்கிறது. மேலும், தமிழகத்தில்  வடகிழக்குப் பருவமழை இன்று காலை வரை, இயல்பைவிட 39% மழை குறைவாக பெய்துள்ளது.

சென்னையில் இயல்பாக பெய்ய வேண்டிய 18 செ.மீ., மழையில் 73% குறைவாக அதாவது 5 செ.மீ., மட்டும் பெய்துள்ளது. கன்னியாகுமரியில் இயல்பான அளவான 19 செ.மீட்டரை விட 151% அதிகமாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், தமிழகத்தில் அக்.25 முதல் 31 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com