மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

தள்ளுபடி விலையில் ஆவின் இனிப்புகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்புகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 11:44 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்புகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருள்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூா்பாகு, குலாப் ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோா், சாக்லேட், தயிா் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருள்களைத் தயாரித்து ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளா்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

அதன்படி, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள், முகவா்கள் மூலம் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டைவிட கூடுதலாக 20 சதவீத விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் சாா்பில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இனிப்புகள், கார வகை அடங்கிய மூன்று காம்போக்களை ரூ. 300, ரூ.500 மற்றும் ரூ.900 என தள்ளுபடி விலையில் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Story image
Story image

இதனுடன் ‘கேரி பேக்’ வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மஞ்சபை அளிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.