நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 'திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பிரசாரம் செய்கிறார். ஆளுநரால்தான் திராவிட மாடல் பிரபலம் அடைகிறது.
பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களின் பதவியே வேஸ்ட்தான்.
திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதுதான் திராவிடம்.
தமிழ்நாடு மக்கள் ஆளுநரை பொருட்படுத்தவில்லை.
மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று பேசியுள்ளார்.