நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

தமிழக ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கோப்புப்படம்

Published On :2 பிப்ரவரி 2024, 8:44 am IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 'திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பிரசாரம் செய்கிறார். ஆளுநரால்தான் திராவிட மாடல் பிரபலம் அடைகிறது. 

பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களின் பதவியே வேஸ்ட்தான்.

திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதுதான் திராவிடம். 

தமிழ்நாடு மக்கள் ஆளுநரை பொருட்படுத்தவில்லை. 

மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். 

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.