நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 'திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பிரசாரம் செய்கிறார். ஆளுநரால்தான் திராவிட மாடல் பிரபலம் அடைகிறது.
பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களின் பதவியே வேஸ்ட்தான்.
திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதுதான் திராவிடம்.
தமிழ்நாடு மக்கள் ஆளுநரை பொருட்படுத்தவில்லை.
மக்களவைத் தேர்தல் வரையாவது ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டாம் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: அரியலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த பெண் உயிரிழப்பு

திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



