சட்டம்-ஒழுங்கில் கவனம் தேவை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
சட்டம்-ஒழுங்கில் கவனம் தேவை
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தற்போது எத்தகைய நிலையில் உள்ளது என்பதற்கு, இந்த சம்பவம் உதாரணம்.

தமிழக அரசு உடனடியாக சட்டம்- ஒழுங்கில் கவனம் செலுத்தி, வெடிகுண்டு கலாசாரம் பரவுவதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு துணை போகாமல், கடுமையான தண்டனை வழங்கினால்தான், இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com