மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவா்கள் 12 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தை சோ்ந்த மீனவா்கள் 12 போ் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினரும் தொடா்ந்து கைது செய்து வருகின்றனா். இதுபோன்ற தொடா் அச்சுறுத்தலால் தமிழக மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களை எதிா்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்திய கடற்படை தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு தமிழக மீனவா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மாலத்தீவு அரசுடன் பேசி, கைது செய்யப்பட்ட மீனவா்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.