

மும்பையில் தன்னை சந்திக்க விரும்பிய பிரணுஷ்கா என்ற மாணவியின் விருப்பத்தை நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், மும்பையில், என்னை சந்திக்க விரும்பிய அறிவார்ந்த, இரக்கப் பண்பு கொண்ட பிரணுஷ்கா என்ற மாணவியின் விருப்பத்தை நான் நிறைவேற்றினேன்.
மணிப்பூரில் நடந்த வன்முறை இவரைப் போன்ற ஒரு பள்ளி மாணவியைக்கூட எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்த உழைக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு தெளிவான நினைவூட்டலாகும்.
ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற பிரணுஷ்காவின் கனவு நனவாக வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.