சிறப்புகள் பல வாயந்த இக்கோயிலில் கடைசியாக 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, கோயில் முழுவதும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் மாயூரநாதர், அபயாம்பிகை சன்னதிகளின் தங்க முலாம் பூசப்பட்ட 2 கலசங்கள், ராஜகோபுரத்தின் 9 கலசங்கள் உள்ளிட்ட 88 கலசங்கள் விமானத்தில் நிர்மாணிக்கப்பட்டது. காவிரி, கங்கை, யமுனா, சரஸ்வதி, சிந்து கோதாவரி, நர்மதை, துங்கபத்ரா, மனோன்மனி ஆகிய ஆறுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கடங்களில் நிரப்பப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.