கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிக்கு வ.உ.சி. பெயர்!

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரிக்கு வ.உ.சிதம்பரனாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிக்கு வ.உ.சி. பெயர்!
Updated on
1 min read

கோவை:  தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரிக்கு வ.உ.சிதம்பரனாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யை போற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் இயங்கி வரும் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்துக்கு வ.உ.சி.யின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் கூறியபடி, கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரிக்கு வ.உ.சி.யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்கல்லூரி இனி, வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்றும் இது, இனி வரும் கல்விக் குழு, மேலாண்மைக் குழுவின் அங்கீகாரம், ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com