புதுக்கோட்டையில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

புதுக்கோட்டையில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
புதுக்கோட்டையில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில நாள்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால் கிராமம், நகராட்சிக்கு உள்பட்ட சாலைகள் உள்ளிட்ட சில இடங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதால், கிராம, நகராட்சி சாா்பில் அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவா்கள் 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் 6 பேர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 3 பேர் என 9 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள 2 ஆயிரத்து 972 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்கள் தினமும் பெறப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமாா் 21 ஆயிரத்து 307 தற்காலிக பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு கொசுப்புழு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிா்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவிகள் ஆகியன போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காய்ச்சல் ஏற்பட்டவுடன் பொது மக்கள் மருத்துவமனையை அணுகுமாறும் தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com