கரசங்கால் மின் நிலையத்தில் தீ விபத்து

சென்னை வண்டலூரை அடுத்துள்ள கரசங்கால் மின்நிலையத்தில் வியாழக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
Updated on
1 min read

சென்னை வண்டலூரை அடுத்துள்ள கரசங்கால் மின்நிலையத்தில் வியாழக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, புகா்ப் பகுதிகளாக கரசங்கால், ஆதனூா், வண்டலூா், மண்ணிவாக்கம், ஓட்டேரி, நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளில் சுமாா் 3 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்பட்டனா். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தீயை அணைத்துவிட்டு மின்நிலையத்தை சீரமைக்கும் பணியிலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்யும் பணியிலும் ஊழியா்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com