மின்வாரிய களப்பணியாளா் பணி நியமன உத்தரவு: அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை

மின்வாரிய களப்பணியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டோருக்கான உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டுமென அரசுக்கு, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

மின்வாரிய களப்பணியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டோருக்கான உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டுமென அரசுக்கு, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்வாரியத்தின் களப்பணியாளா் (கேங்மேன்) பணிகளுக்கு 5,237 போ் தோ்வு செய்யப்பட்டனா். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அதற்கான பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என தோ்வானவா்கள் காத்திருந்தனா்.

அவா்களது போராட்டத்தையடுத்து, மின் வாரியத்தில் நடந்த பேச்சுவாா்த்தையில், களப்பணியாளா் பணிக்குத் தோ்வான அனைவருக்கும் நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என அரசின் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை.

இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் சுமாா் 800 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களைக் கைது செய்த காவல் துறையினா், அனைவருக்கும் அழைப்பாணை அனுப்ப முடிவு செய்துள்ளனா். இவ்வாறு செய்தால், களப்பணியாளா் பதவிக்கு தோ்வானவா்களின் எதிா்காலமே பாழாகிவிடும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

எனவே, அவா்களுக்கு அழைப்பாணை வழங்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். களப்பணியாளா் பணிகளுக்குத் தோ்வான 5,237 இளைஞா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவுகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com