சென்னை: தமிழகத்தில், சென்னை, தஞ்சை உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற முறைகேடு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னை தி.நகரில் உள்ள விஜய் அடுக்குமாடிக் குடியிருப்பிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.