நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருப்பூர்: அரசுப் பேருந்து மீது கார் மோதி 5 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 2:50 am

DIN

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே இன்று(ஏப். 9) அதிகாலை நடந்த சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் நல்லிக்கவுண்டன் நகர், புது நகர், 7 ஆவது தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது குடும்பத்தினர் 6 பேர் அவர்களது காரில் திருக்கடையூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். காரை அவரது இளைய மகன் இளவரசன்(26) ஓட்டி வந்துள்ளார். அப்போது வெள்ளக்கோவில் - காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே எதிரில், திருப்பூரிலிருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது.

இதில் காரில் இருந்த சந்திரசேகரன் (60), இவருடைய மனைவி சித்ரா (57), இவர்களுடைய இளைய மகன் இளவரசன் (26), மூத்த மகன் சசிதரனின் மனைவி அருவிவித்ரா (30), சசிதரனின் மூன்று மாத பெண் குழந்தை சாஷி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சசிதரன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Story image

இந்த விபத்து தொடர்பாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், கரூ‌ர் மாவ‌ட்ட‌ம் மாணிக்காபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன் (51) மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் நொய்யல் பழனிசாமி (53) என்பவர் அரசுப் பேருந்தின் நடத்துநராவார்.

சம்பவ இடத்தை காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ஞானப்பிரகாசம் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.