எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மெரினா அருகே சுறா நடமாட்டம்?

மெரினா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை சுறா தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2024, 1:52 pm IST

மெரினா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை சுறா தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையை சேர்ந்த மணிமாறன்(வயது 25) என்ற இளைஞர் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் மெரினா கடற்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கரைக்கு 200 மீட்டர் தொலைவில் மீன் கூட்டங்களை கண்டவுடன் கடலுக்குள் சென்று வலையை வீச முயற்சித்துள்ளார்.

அப்போது, மணிமாறனின் காலை சுறா ஒன்று கடித்ததாகவும் சுதாரித்துக் கொண்ட அவர், உடனடியாக கரைக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளார்.

இடது குதிங்காலில் சுறா கடித்ததில் காயம் ஏற்பட்ட நிலையில், கைகளால் நீந்தி கரைக்கு திரும்பிய மணிமாறனை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் நலன் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், மெரினா கடற்கரைக்கு அருகே சுறா மீன்களை காண்பது மிகவும் அரிதான ஒன்று எனவும், கடலில் நீச்சலடித்து பழக்கமுடையவர் என்பதால் மணிமாறன் பிழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசிடம் வலியுறுத்தியதாக கூறிய அவர், நொச்சிக்குப்பம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை கடற்கரை பகுதிகளில் சுமார் 20 சுறாக்கள் காணபட்டன. அவை அனைத்தும் தற்போது கிழக்கு கடல் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துவிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.