தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.