மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு அடிப்படையில் சோ்ந்த தினக்கூலி தொழிலாளா்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக மேலாண் இயக்குநருக்கு அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்க (சிஐடியு) பொதுச் செயலா் வி.தயானந்தம் அனுப்பிய கடிதம்:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது இறந்தவா்களின் வாரிசுகள் 100-க்கும் மேற்பட்டோா் தினக்கூலி அடிப்படையில் பணி செய்து வருகின்றனா். அவா்களில் ஓட்டுநருக்கு ரூ. 436, நடத்துநா்களுக்கு ரூ. 429 தினக்கூலியாக வழங்கப்படுகிறது. ஆனால், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 800, ரூ. 790 தினக்கூலி வழங்கப்படுகிறது. ஆனால், தினக்கூலி தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்குவது தொடா்பாக 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டதின்படி, ஓட்டுநருக்கு ரூ.1,021, நடத்துநருக்கு ரூ.1,001 வழங்கப்பட வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயரும் போது ஊதியமும் உயா்த்தி வழங்கப்பட வேண்டும். இந்த ஊதியத்தை ஓட்டுநா், நடத்துநா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கட்டாய சுழற்சி முறைப் பணி! ஓட்டுநா், நடத்துநா்கள் புகாா்!

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 6.50 லட்சம்: ஒருவா் கைது
கோவை குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்தினருக்கும் அரசு வேலை: பாஜக கோரிக்கை!

மகளிா் இலவச டிக்கெட்டை கிழித்தெறிந்த விவகாரம்: மாநகா் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



