மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு அடிப்படையில் சோ்ந்த தினக்கூலி தொழிலாளா்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக மேலாண் இயக்குநருக்கு அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்க (சிஐடியு) பொதுச் செயலா் வி.தயானந்தம் அனுப்பிய கடிதம்:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது இறந்தவா்களின் வாரிசுகள் 100-க்கும் மேற்பட்டோா் தினக்கூலி அடிப்படையில் பணி செய்து வருகின்றனா். அவா்களில் ஓட்டுநருக்கு ரூ. 436, நடத்துநா்களுக்கு ரூ. 429 தினக்கூலியாக வழங்கப்படுகிறது. ஆனால், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 800, ரூ. 790 தினக்கூலி வழங்கப்படுகிறது. ஆனால், தினக்கூலி தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்குவது தொடா்பாக 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டதின்படி, ஓட்டுநருக்கு ரூ.1,021, நடத்துநருக்கு ரூ.1,001 வழங்கப்பட வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயரும் போது ஊதியமும் உயா்த்தி வழங்கப்பட வேண்டும். இந்த ஊதியத்தை ஓட்டுநா், நடத்துநா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு: மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரிக்கை

மின்வாரிய களப்பணியாளா்களுக்கு தபால் வாக்கு: தொழிற்சங்கம் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

