சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பள்ளிகள் இன்று இயங்கும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று(திங்கள்கிழமை) வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வருகிற ஆக. 9- ஆம் தேதி வரை மேற்கு காற்றின் திசை மாறுபாடு, வெப்பச் சலனம் காரணமாக மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் நள்ளிரவு முதலு விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என அறிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

