திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம்  உத்தரவு

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

சி.வி.சண்முகம்.

Updated On :13 ஆகஸ்ட் 2024, 2:47 am IST

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான  வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆக.27-ஆம் தேதி திண்டிவனம் காந்தி சிலை அருகே அதிமுக சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்பி - யுமான சி.வி. சண்முகம் கலந்து கொண்டு, முதல்வரையும், அரசையும் கடுமையாக விமா்சித்து பேசினாா். இதுகுறித்து  விழுப்புரம் மாவட்ட திமுக நிா்வாகி ராஜாசக்தி திண்டிவனம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில் சி.வி.சண்முகம் மீது இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தாா். மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஜான் சத்யன், முகமது ரியா ஆகியோா்ஆஜராகி வாதிட்டனா்.

அப்போது, ‘சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. ஆனால், புகாா்தாரா் திமுக நிா்வாகி. அவா், ஆக. 27 ஆம் தேதி பேசியதற்கு அக். 6 ஆம் தேதி புகாா் செய்துள்ளாா். காலதாமதமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யவேண்டும்’ என்று வாதிட்டாா்.

இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீது தாமதமாக வழக்கு பதிவு செய்தது, திமுக பிரமுகா் வழக்கு தொடா்ந்தது ஆகியவற்றை காரணங்களாக சுட்டிக்காண்பித்து, அவா் மீது திண்டிவனம் போலீஸாா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.