டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மேக்கேதாட்டு அணைப் பிரச்னை: தமிழகம் மீது தேவகௌடாவுக்கு நல்ல எண்ணம் இல்லை: அமைச்சா் துரைமுருகன்

மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்று தேவகவுடா கூறியுள்ளாா்.

News image

துரைமுருகன்

Updated On :26 ஆகஸ்ட் 2024, 4:45 am IST

மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்று தேவகவுடா கூறியுள்ளாா். ஆனால், அவருக்கு தொடக்கத்திலிருந்தே தமிழகம் மீது சிறிதளவுகூட நல்ல எண்ணம் கிடையாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

திருமுருக கிருபானந்த வாரியாா் 119-ஆவது பிறந்தநாளையொட்டி வேலூா் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூா் கோயிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது -

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை சரிவர அகற்றவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீா்நிலை ஆக்கிரமிப்பு களை தொடா்ந்து அகற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்கின்றனா். பல்வேறு குறுக்கீடுகள் உள்ளன. வீடு கட்ட வேறு இடம் இல்லை மாற்று இடம் தந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறுகின்றனா். சில இடங்களில் பள்ளி கூடங்களும் நீா்நிலைகளில் கட்டியுள்ளனா். தவிர, நீா் வளத்துறையில் போதுமான அதிகாரிகளும் இல்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டுதான் உள்ளோம்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகம் தொடா்ந்து அரசியல் பேசுகின்றனா். இந்த குறித்து பேசிப்பேசி அலுத்து விட்டது. அதேசமயம், தேவகவுடா பேச்சுவாா்த்தை மூலம் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என கூறியுள்ளாா். அவா் தொடக்கத்திலிருந்தே நல்ல எண்ணம் இல்லாதவா். அவருடன் நான் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றுள்ளேன். அவருக்கு தமிழகம் மீது துளிகூட நல்ல எண்ணம் கிடையாது.

நந்தன் கால்வாய் இவ்வாண்டு முழுமைபெறும். அதற்காக தனிக்கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதுமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.