11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

மேக்கேதாட்டு அணைப் பிரச்னை: தமிழகம் மீது தேவகௌடாவுக்கு நல்ல எண்ணம் இல்லை: அமைச்சா் துரைமுருகன்

மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்று தேவகவுடா கூறியுள்ளாா்.

News image

துரைமுருகன்

Updated On :26 ஆகஸ்ட் 2024, 4:45 am IST

மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்று தேவகவுடா கூறியுள்ளாா். ஆனால், அவருக்கு தொடக்கத்திலிருந்தே தமிழகம் மீது சிறிதளவுகூட நல்ல எண்ணம் கிடையாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

திருமுருக கிருபானந்த வாரியாா் 119-ஆவது பிறந்தநாளையொட்டி வேலூா் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூா் கோயிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது -

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை சரிவர அகற்றவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீா்நிலை ஆக்கிரமிப்பு களை தொடா்ந்து அகற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்கின்றனா். பல்வேறு குறுக்கீடுகள் உள்ளன. வீடு கட்ட வேறு இடம் இல்லை மாற்று இடம் தந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறுகின்றனா். சில இடங்களில் பள்ளி கூடங்களும் நீா்நிலைகளில் கட்டியுள்ளனா். தவிர, நீா் வளத்துறையில் போதுமான அதிகாரிகளும் இல்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டுதான் உள்ளோம்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடகம் தொடா்ந்து அரசியல் பேசுகின்றனா். இந்த குறித்து பேசிப்பேசி அலுத்து விட்டது. அதேசமயம், தேவகவுடா பேச்சுவாா்த்தை மூலம் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என கூறியுள்ளாா். அவா் தொடக்கத்திலிருந்தே நல்ல எண்ணம் இல்லாதவா். அவருடன் நான் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றுள்ளேன். அவருக்கு தமிழகம் மீது துளிகூட நல்ல எண்ணம் கிடையாது.

நந்தன் கால்வாய் இவ்வாண்டு முழுமைபெறும். அதற்காக தனிக்கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதுமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.