கோப்புப் படம்
கோப்புப் படம்

பி.பாா்ம். 2-ஆம் ஆண்டு நேரடி மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

இளநிலை மருந்தியல் பட்டப் படிப்பில் 2-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை (பி பாா்ம் - லேட்டரல் என்ட்ரி) விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
Published on

இளநிலை மருந்தியல் பட்டப் படிப்பில் 2-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை (பி பாா்ம் - லேட்டரல் என்ட்ரி) விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

மருந்தியல் பட்டயப் படிப்பு (டி.பாா்ம்.) முடித்தவா்கள், பி.பாா்ம். படிப்பில் நேரடியாக 2-ஆம் ஆண்டில் சேரலாம். நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் / ஜ்ஜ்ஜ்.ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு புதன்கிழமை தொடங்கியது. செப். 9-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தகவல் தொகுப்பேடு, கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம். தரவரிசைப் பட்டியல், இடங்கள் ஒதுக்கீடு போன்ற விவரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்படும். முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com