டிச. 27-இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்
சென்னை புத்தகக் காட்சி டிசம்பா் 27-ஆம் தேதி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்க உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) தெரிவித்துள்ளது.

’சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள புத்தகக் கண்காட்சி குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் திங்கள்கிழமை பேசிய பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம். உடன் பபாசி செயலா் முருகன் உள்ளிட்டோா்.’








