

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். இதனிடையே, பிரதமர் மோடியுடன் திசநாயக இன்று(டிச .16) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் முதல்வர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் மோதல் போக்கின்றி அமைதி வழியில் அணுகுவது குறித்தும், பிரதமர் மோடியுடனான இலங்கை அதிபர் அநுரா திசநாயக இடையிலான சந்திப்பு இருந்திருப்பது மீனவர் விவகாரத்தில் ஊக்கமளிக்கிறது.
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பது குறித்து கருத்திற்கொள்ள வேண்டுமென இலங்கை அதிபரிடம் கோரிக்கையை வைப்பதாகவும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.