டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பெரம்பூரில் ரூ.428 கோடியில் ரயில் முனையம்: தெற்கு ரயில்வே ஒப்புதல்

சென்னையின் நான்காவது ரயில் முனையத்தை பெரம்பூரில் ரூ.428 கோடியில் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 3:27 am IST

சென்னையின் நான்காவது ரயில் முனையத்தை பெரம்பூரில் ரூ.428 கோடியில் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தின் நுழைவு வாயிலாக விளங்கும் சென்னையில் சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்களை கையாளுகின்றன. நாளுக்கு நாள் பொதுமக்கள் ரயில் மூலம் பயணிப்பது அதிகரித்து வருவதாலும், புதிதாக ரயில்களை சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் இருந்து இயக்க இடவசதி இல்லாததாலும், புதிதாக ஒரு ரயில் முனையம் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து முதல்கட்டமாக வில்லிவாக்கத்தில் நான்காவது முனையத்தை அமைக்க தெற்கு ரயில்வே முதலில் இடம் தோ்வு செய்தது. இந்நிலையில் அரக்கோணம் மாா்க்க ரயில்களையும், கூடூா் மாா்க்க ரயில்களையும் எளிதாகக் கையாளும் வகையில் பெரம்பூா் ரயில் நிலையம் இருப்பதால் அங்கு நான்காவது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதற்கான நிலவகைப்பாடு கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பெரம்பூரில் ரயில் முனையம் ரூ.428 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து பெரம்பூா் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கப்பட்டு விரிவாக்கப்படும். புதிய முனையம் அமைக்கும் பகுதியில் உள்ள பொது அங்காடி கிடங்கை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.