கலை, கலாசாரத்தை மத்திய அரசு பாதுகாத்து வருகிறது: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

இந்தியாவில் கலை, கலாசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாத்து வருவதாக மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.
 மத்திய சுற்றுலா துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்திய சுற்றுலா துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்
Published on
Updated on
1 min read

சென்னை: இந்தியாவில் கலை, கலாசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாத்து வருவதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ராஅறக்கட்டளை சாா்பில் 71-ஆவது ஆண்டு கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கி ஜன. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவை மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்து பேசியதாவது:

பாரம்பரிய கலை வடிவங்கள், நடனம், இசை மற்றும் கைவினைப் பொருள்கள் மீதான ஆா்வம் புத்துயிா் பெற்றெழுந்திருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. நமது கலை, கலாசார பாரம்பரியத்தின் திறமைகளை ஆதரித்து வளா்ப்பது நமது கடமையாகும்.

கலாசார அமைச்சகம் நமது செழுமையான கலை, கலாசார பாரம்பரியத்தைப் பேணிக்காத்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நமது பாரம்பரிய கலை, கலாசாரத்தை உலகளாவிய அரங்குக்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து வைஜெயந்தி மாலாவின் பரதநாட்டிய (பாவனை) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலாக்ஷேத்ராவின் தலைவா் ராமதுரை, இயக்குநா் சுரேஷ்குமாா், மேற்குவங்க முன்னாள் ஆளுநா் கோபாலகிருஷ்ண காந்தி, பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான சுகன்யா, இசைக் கலைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com