இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்!

தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும் என்று வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் கூறினார்.

News image
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலிலிருந்து கிரேன் மூலம் லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகள்.
Updated On :24 டிசம்பர் 2024, 12:46 am

DIN

தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித் இதுகுறித்து தூத்துக்குடி வ.உசி. துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கை: வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25ஆம் நிதியாண்டில், இதுவரை 29.70 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு 1.87 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் 6.74 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது.

306 மீட்டர் நீளம், 14.20 மீட்டர் மிதவை ஆழமுள்ள பெரிய கப்பல்களைக் கையாள வசதியாக, வடக்கு சரக்கு தளம் 3-ஐ ஆழப்படுத்தும் பணி 2025 பிப்ரவரியில் முடிவடையும். கப்பல்கள் வந்து செல்லும் நுழைவு வாயில், கப்பல்கள் திரும்பும் சுற்றுப்பாதை ஆகியவற்றை ஆழப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. வடக்கு சரக்கு தளம் 3-ஐ இயந்திரமயமாக்கும் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொது சரக்குகளைக் கையாளுவதற்கு வசதியாக பொறியியல், கொள்முதல், கட்டுமானம் அடிப்படையில் தோராயமாக ரூ. 80 கோடியில் சரக்குதளம் 10 அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. ஏற்கெனவே 10.70 மீட்டர் மிதவை ஆழமுள்ள இத்தளத்தை 14.50 மீட்டராக ஆழப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு சரக்கு தளம் 2-இன் செயல்திறனை அதிகரிக்க, அங்கு ஒரு நாளுக்கு கூடுதலாக 25ஆயிரம் டன் சரக்குகளைக் கையாளும் நோக்கத்துடன் 100 டன் திறன் கொண்ட நகரும் பளு தூக்கி இயந்திரம் 2025 ஜனவரி யில்நிறுவப்படவுள்ளது.

வடக்கு சரக்கு தளம் 2, 3 ஆகியவற் றில் தலா 5 ஆயிரம் ச.மீ. பரப்பு கூடுதலாக உருவாக்கப்படும் பணி நிகழாண்டுக்குள் முடியும். இதுகுறித்து, துறைமுக ஆணையத் தலைவர் சுசந்த குமார் புரோஹித் கூறும்போது, பல்வேறு இயற்கையான தனித்துவ சிறப்பம்சங்கள், வரவுள்ள தொழிற்சாலைகள், உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் வ.உசி. துறைமும் தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாகத் திகழும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.