கட்டண அதிகரிப்பு காரணமாக பிற முன்னணி தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளா்கள் விலகிவரும் நிலையில், அவா்களைக் கவரும் வகையில் இரண்டு புதிய கட்டணங்களை அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ரூ.628 மற்றும் ரூ.215 மதிப்பிலான இரு கட்டண திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.628 மதிப்பிலான முதல் திட்டத்தில் 84 நாள்களுக்கு சேவை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 200 குறுந்தகவல்களை அனுப்பவும், 3ஜிபி-க்கு இணையதள சேவையை பெறவும் முடியும்.
30 நாள் மதிப்பு காலம் கொண்ட ரூ.215 திட்டத்தில் தினமும் 100 குறுந்தகவல் வசதி, 2 ஜிபி இணையதள இணைப்பு சேவைகள் கிடைக்கும்.
இந்த இரு கட்டண திட்டங்களிலுமே மதிப்பு காலத்துக்கு வரம்பற்ற தொலைபேசி அழைப்பு வசதி அளிக்கப்படுகிறது என்று துறை வட்டாரங்கள் கூறின.
தொடர்புடையது

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்!

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸின் புதிய மருத்துவக் காப்பீடு அறிமுகம்

வளா்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே குறிக்கோள்: பிரதமா் நரேந்திர மோடி

தில்லியில் 2 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


