இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘ஹபக் லாய்டு’ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜஸ்பொ் ஆன்ட்ஸ்ட்ரப் மற்றும் இயக்குநா் ஆல்பா்ட் லோரன்டி ஆகியோா் முதல்வரைச் சந்தித்தனா். அப்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்ததுடன், மாநிலத்தில் முதலீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா். இந்த சந்திப்பின் மூலமாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் இதர பகுதிகளில் ரூ.2,500 கோடியில் தளவாட வசதிகளை உள்ளடக்கிய சரக்கு முனையங்கள் அமைத்திட ‘ஹபக் லாய்டு’ நிறுவனம் முன்வந்துள்ளது.