தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பங்காளிகள் எங்களை பகையாளிகளாக நினைக்கிறார்கள்: அண்ணாமலை

பங்காளிகள் எங்களை பகையாளிகளாக நினைக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 பிப்ரவரி 2024, 9:57 am

DIN

பங்காளிகள் எங்களை பகையாளிகளாக நினைக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"வரும் பிப். 11 ஆம் தேதி என் மண் என் மக்கள் யாத்திரையின் 200-வது தொகுதி சென்னைக்கு வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து, பிப். 11 ஆம் தேதி மாலை மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று உரையாற்றுகிறார்.

என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பிப். 25 ஆம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக கட்சி அதிகமான இடங்களில் முதலிடத்தையும், சில இடங்களில் இரண்டாம் இடத்தையும் பிடிக்கும். நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. பங்காளிகள் எங்களை பகையாளிகளாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல" எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.