பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி: காவல்துறை

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி
வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி
Published on
Updated on
1 min read


சென்னை: சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கம் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களின் உதவியோடு பள்ளிகளுக்குச் சென்று வெடிகுண்டு இருக்கிறதா என்று தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணியில், எந்தப் பள்ளியிலும் வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள் இயங்கும் தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவர்களை அழைத்துச் செல்ல அறிவுறுத்தியிருந்தனர்.

இந்தத் தகவல் பரவியதும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்களும் அச்சமடைந்தனர். தங்களது பிள்ளைகள் பயிலும் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள் சிலர் பள்ளிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தனர். பலர், நேரடியாக பள்ளிகளுக்கேச் சென்று பார்த்தனர்.

இதனால், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படாத பள்ளிகளிலும் பெற்றோர் குவியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com