சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் ‘நீங்க ரோடு ராஜாவா’ என்ற திட்டத்தின் கீழ் 81 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் @roadraja என்று டேக் செய்து விதிமீறும் வாகன ஓட்டிகள் குறித்து சமூக வலைதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகளின் விதிமீறல்கள் குறித்து இந்த திட்டத்தில் பகிரப்பட்ட செய்திகளின் அடிப்படையில் காவல்துறை இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.