கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு திருப்பயணமாக இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு யாரும் செல்லவில்லை என்பதை கச்சத்தீவு திருப்பயண குழு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு ஆலயத் திருவிழா பிப். 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பை திருப்பயணக் குழு வெளியிட்டுள்ளது.
மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் இந்தியாவில் இருந்து செல்லவிருந்த பயண முடிவை ரத்து செய்துள்ளது திருப்பயணக்குழு.