

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று(பிப்.25ஆம் தேதி) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்படும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புறநகர் மின்சார ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் வரை இயக்கப்படும் 5 புறநகர் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நாளை(பிப்.26) முதல், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 மணிக்கு சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11,20 மணிக்கு புறப்படு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாா்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, இரவு 8.20, இரவு 8.40, இரவு 9, இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, இரவு 10.10, இரவு 10.35, இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.