மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!

பேருந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை
மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 5 வயதுக்குட்பட்ட 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில் சொட்டு மருந்துகள் வழங்கப்படும்.

பயணத்தில் இருக்கும் பெற்றோர்களின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com