நிதித்துறைச் செயலருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை

போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அவர் இந்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்வேறு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. 

பொங்கல் முடிந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற அரசின் வேண்டுகோளை தொழிலாளர்கள் ஏற்காத நிலையில், தொழிற்சங்கங்களுடன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் சிவசங்கர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதில் சுமூதத் தீா்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம் நிச்சயம் என்று தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com