பொங்கல் பண்டிகை: புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

பொங்கல் பொது விடுமுறையை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன.15) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பொங்கல் பொது விடுமுறையை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன.15) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விடுமுறை நாள்களில் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு திங்கள்கிழமை சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

அதன்படி, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூா்பேட்டை, கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com