மகர விளக்கு பூஜை: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரி மலை செல்பவர்களுக்காக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரி மலை செல்பவர்களுக்காக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொல்லத்தில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி காலை 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.

அதேபோல் மறுவழித்திடத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி இரவு 11.45-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள்(ஜன. 17)  கொல்லம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com