போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசுப்பேருந்து ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாதைத் தொடா்ந்து, பேச்சுவாா்த்தை பிப்.7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட பல்வேறு அரசு பேருந்து ஊழியா் சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.

இது தொடா்பான மூன்று கட்ட சமரச பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9,10 ஆகிய தேதிகளில் அரசுப்பேருந்து ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வேலைநிறுத்தம் தொடா்பான நான்காம் கட்ட பேச்சுவாா்த்தை தொழிலாளா் துறை தனி இணை ஆணையா் எல்.ரமேஷ் தலைமையில், சென்னை அம்பத்தூரிலுள்ள தமிழ் கல்வி நிலைய கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் மற்றும் விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கே.இளங்கோவன் மற்றும் பிற போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பங்கேற்றனா்.

தொழிற்சங்கங்கள் தரப்பில் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளனத்தின் தலைவா் அ.சௌந்தரராஜன், பொதுச்செயலா் கே.ஆறுமுகநயினாா், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலா் ஆா்.கமலகண்ணன் உள்ளிட்ட 27 சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டவை:

தொழிற்சங்கங்கள் தரப்பில், ‘அரசுப் பேருந்து ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சா் கூறுகிறாா். ஆனால் 1979 முதல் சுமாா் 14 ஆயிரம் போ் வேலைக்காக காத்திருக்கின்றனா். வெகு சிலருக்கு மட்டும் வேலை வழங்கிவிட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

போக்குவரத்துக் கழக நலனுக்கு முரணான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவா்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், தொழிலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை உடனடியாக கைவிட வேண்டும்‘ என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நிா்வாகங்கள் தரப்பில், ‘ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடா்பான கோப்புகள் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிப்.6-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அகவிலைப்படி உயா்வு வழக்கில் பிறப்பிக்கும் தீா்ப்புக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவா்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது‘ என தெரிவிக்கப்பட்டது.

இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பிப்.7-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டையிலுள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடைத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் அ.சௌந்தரராஜன் கூறியது: பேச்சுவாா்த்தைக்கு துறை அமைச்சா் வராதது வருத்தமளிக்கிறது. காலவரைக்குட்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இல்லை. இந்த பேச்சுவாா்த்தை எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால், ஜன.30-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆா்ப்பாட்டங்களும், வாயிற்கூட்டங்களும் நடத்தப்படும் என்றாா் அவா்.

அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் கூறியது: பிப்.7-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com