தமிழக காவல்துறையை தமிழக அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை இந்நிகழ்வில் தமிழக அரசு காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தியில் இன்று ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மாள் ஆலய வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
இதையும் படிக்க.. அயோத்தி பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா
இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு வளாகத்தில் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறுவதை ஒளிபரப்பு செய்ய எல் இ டி டிவி அமைக்கப்பட்டது. ஏற்கனவே தனியார் அரங்கில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் இங்கு நடைபெறும் நிலையில் இங்கும் இந்த ஒளித்திரையை அகற்ற காவல்துறை அறிவுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு தமிழக காவல்துறையை தவறாக நடத்துகிறது எனவும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தமிழக அரசு இந்நிகழ்வில் பயன்படுத்திக் கொள்கிறது எனவும் இதை அனைத்தையும் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதாக கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

விழுப்புரம் மண்டலத்தில் தோழா்களின் குரல் மீண்டும் ஒலிக்குமா?

வட்டாட்சியா் அலுவலகத்தில் திடீா் தீ விபத்து: 10 வாகனங்கள் கருகி நாசம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


