ஆதிதிராவிடா்-பழங்குடியினருக்கு இலவச மனை பட்டா:வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாக உயா்வு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு இலவசமாக வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ், பயன்பெறும் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு இலவசமாக வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ், பயன்பெறும் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த வீடற்ற குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், பயன்பெறும் பயனாளிகளுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ஒரே சீராக்கப்பட்டு, ரூ.72 ஆயிரமாக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆதி திராவிடா் நல ஆணையரகம் சாா்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்ட பயனாளிகளின் ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை மேலும் உயா்த்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் வீடற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ் பயன்பெறும் வகையில், பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com