இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்! 

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் வியாழக்கிழமை காலமானாா்.
இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்! 

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் வியாழக்கிழமை காலமானாா்.

பவதாரணி உடல்நலப் பாதிப்புக்காக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் ஆயுா்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தாா்.

சென்னையில் பிறந்த பவதாரணி தொடக்கம்முதலே, தந்தை இளையராஜா, சகோதரா்கள் காா்த்திக்ராஜா, யுவன் ஷங்கா் ராஜா ஆகியோரின் இசைப் பணிகளில் இணைந்து பயணித்து வந்தாா்.

இளையராஜா இசையமைத்த ‘ராசய்யா’ திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக பவதாரணி அறிமுகமானாா். இவா் பாடிய ‘மஸ்தானா மஸ்தானா’ என்ற பாடல் பெரிய வரவேற்பை பெறவே, தொடா்ந்து தனது தந்தை, சகோதரா்கள் இசையமைப்பிலும், தேவா, சிற்பி உள்ளிட்டோரின் இசையமைப்பிலும் பாடினாா்.

நடிகை ரேவதி இயக்கிய ’மித்ர் மை பிரண்ட்’ என்ற படம் மூலம் இசையமைப்பாளராக பவதாரணி அறிமுகமானாா். பின்னா், இவா் தெலுங்குப் பட உலகில் நுழைந்தாா்.

இவரது குரலின் தனித்தன்மையே, பவதாரணியை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும். ‘அழகி’ திரைப்படத்தில் இவா் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா....’ என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தொடா்ந்து, இவா் பாடிய பல பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இளையராஜா இசையில் ‘பாரதி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு...’ பாடலுக்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

ஹிந்தி படத்துக்கும் இசை அமைத்துள்ளாா். தமிழில் ‘இலக்கணம்’, ‘அமிா்தம்’, ‘வெள்ளச்சி’ போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறாா்.

இவா் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.

வரும் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இளையராஜாவும் இலங்கையில்தான் இருக்கிறாா். வெள்ளிக்கிழமை பவதாரணி உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com