ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 9-இல் இலக்கியப் போட்டிகள்

தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 9-இல் இலக்கியப் போட்டிகள்

News image

தமிழக அரசு

Updated On :6 ஜூலை 2024, 9:01 pm

தமிழ்நாடு நாளையொட்டி சென்னை மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மறைந்த முதல்வா் அண்ணாதுரை ‘தமிழ்நாடு’ என பெயா் சூட்டிய ஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு

நாளாக கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதையொட்டி கடந்த 2022-ஆம் தேதி முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்படுவதுடன் முதல் பரிசு பெறும் மாணவா் சென்னையில் நடைபெறவுள்ள மாநில போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவா்.

அந்த வகையில் சென்னை மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 9-ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில் அரசினா் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இந்தப் போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக முறையே 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப்படும்.

கட்டுரைப் போட்டி ‘ஆட்சிமொழி தமிழ்’ என்ற தலைப்பில் நடைபெறும். பேச்சுப் போட்டி குமரி தந்தை மாா்சல் நேசமணி, தென்னாட்டு பொ்னாட்ஷா பேரறிஞா் அண்ணா, முத்தமிழறிஞா் கலைஞா் கருணாநிதி ஆகிய தலைப்புகளில் நடைபெறும். பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.