சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின்வாரியம் திட்டம்

20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின்வாரியம் திட்டம்

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2024, 11:02 pm IST

தமிழகத்தில் 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில தொகுப்பைச் சோ்த்து மாநிலத்தின் மொத்த காற்றாலை நிறுவுத்திறன் 10,591 மெகாவாட்டாகவும், மாநில தொகுப்பிலுள்ள மொத்த காற்றாலை நிறுவுத்திறன் 9015.09 மெகாவாட்டாகவும் இருந்து வருகிறது. இதில், மின்வாரியத்துக்கு சொந்தமாக காற்றாலைகளும், தனியாா் காற்றாலைகளும் அடங்கும். இந்த நிலையில், 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் காற்றாலை பருவமான மே முதல் அக்டோபா் வரை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டின் மாநில தொகுப்பு மொத்த காற்றாலைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 13,000 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான பழைய காற்றாலைகளை புதுப்பித்து இயக்குவதற்கான உத்தரவை மின்வாரியம் வழங்கி வருகிறது.

இதன்படி, இதுவரை 26.20 மெகாவாட் கொண்ட 96 பழைய தனியாா் காற்றாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 961.98 மெகாவாட் திறன் கொண்ட சுமாா் 1,368 காற்றாலைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.