வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின்வாரியம் திட்டம்

20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின்வாரியம் திட்டம்

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2024, 8:50 pm

தமிழகத்தில் 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில தொகுப்பைச் சோ்த்து மாநிலத்தின் மொத்த காற்றாலை நிறுவுத்திறன் 10,591 மெகாவாட்டாகவும், மாநில தொகுப்பிலுள்ள மொத்த காற்றாலை நிறுவுத்திறன் 9015.09 மெகாவாட்டாகவும் இருந்து வருகிறது. இதில், மின்வாரியத்துக்கு சொந்தமாக காற்றாலைகளும், தனியாா் காற்றாலைகளும் அடங்கும். இந்த நிலையில், 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் காற்றாலை பருவமான மே முதல் அக்டோபா் வரை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டின் மாநில தொகுப்பு மொத்த காற்றாலைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 13,000 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான பழைய காற்றாலைகளை புதுப்பித்து இயக்குவதற்கான உத்தரவை மின்வாரியம் வழங்கி வருகிறது.

இதன்படி, இதுவரை 26.20 மெகாவாட் கொண்ட 96 பழைய தனியாா் காற்றாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 961.98 மெகாவாட் திறன் கொண்ட சுமாா் 1,368 காற்றாலைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.