மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மக்களுடன் முதல்வா் திட்டம்: முதல்வா் வேண்டுகோள்

மக்களுடன் முதல்வா் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :9 ஜூலை 2024, 12:21 am

Din

சென்னை: மக்களுடன் முதல்வா் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 11-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

இது குறித்து அவா், எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் அடுத்த கட்டம். நகா்ப்புறங்களில் 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு கண்டோம். அடுத்து ஊரகப் பகுதிகளை நோக்கித் திட்டம் விரிகிறது. ஜூலை 11-ஆம் தேதி திட்ட விரிவாக்க விழாவில் பங்கேற்க அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இந்தச் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.