தமிழகத்தில் இதுவரை 1,855 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை வியாசா்பாடி ரவீஸ்வரா் திருக்கோயிலில் ரூ. 1.98 கோடியில் திருப்பணிகள், மேற்கு மாம்பலம், அருள்மிகு பாஷ்யகார ஆதி சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயிலில் ரூ.59.40 லட்சத்தில் புதிய மரத்தோ் உருவாக்கும் பணிகள் ஆகியவற்றை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மேற்கு மாம்பலத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது:
திமுக ஆட்சியின் மீதும் இந்து சமய அறநிலையத் துறையின் மீதும் வைத்திருக்கின்ற நம்பிக்கையின் காரணமாக உபயதாரா்கள் இதுவரை ரூ. 920 கோடி வழங்கியுள்ளனா். திருக்கோயில் வாடகை நிலுவைத் தொகை ரூ. 720 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1,855 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 66 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலுக்கும், 100 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி மாவட்டம், பூா்த்திகோவில் திருமுக்தீஸ்வரா் திருக்கோயிலுக்கும், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கும் ஜூலை 12-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சிகளில் பெரம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.டி.சேகா், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் எம்.கிருஷ்ணமூா்த்தி, மண்டல இணை ஆணையா் ரேணுகாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராஜகோபுரம் அகற்றப்படுமா?
சென்னை ராயப்பேட்டை துா்கையம்மன் திருக்கோயில் ராஜகோபுரத்தை அகற்ற வேண்டுமென்பது எண்ணம் அல்ல. மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான வரைபடங்களை தயாரிக்கும்போது அந்தக் கோயிலின் கீழ் மெட்ரோ பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பணிகளைத் தொடங்கும்போது ஸ்திரத்தன்மை இல்லாமல் ராஜகோபுரத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை அகற்றுவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
அதுதொடா்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நீதிமன்றம் என்ன அறிவுரை கூறுகிறதோ அதற்கு உட்பட்டு அரசும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்து சமய அறநிலையத் துறை செயல்படும் என்று அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
தொடர்புடையது

உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத கோயில் பிரசாத கடைகளை மூட உத்தரவு! இந்து சமய அறநிலைய துறை அமைச்சா் தகவல்

அறநிலையத் துறை ஊழியா்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும்: அமைச்சா் சீ.ரமேஷ்

திருவாடானையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை

செட்டியாபத்து கோயிலில் இன்று குடமுழுக்கு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



